Lilypie

Lilypie

Tuesday, December 22, 2009

ஈரோடு பதிவர் சந்திப்பு படங்கள்

அங்கிள்ஸ் & ஆண்ட்டீஸ் எல்லாரும் பதிவர் சங்கமத்தைப் பற்றி என்ன என்னவெல்லாமோ எழுதினாங்க....ஆனா, அங்க லாமின்னு ஒரு குட்டிப் பையன் சுத்தி சுத்தி வந்து எல்லாரையும் போட்டோ எடுத்தானே அத யாராவது எழுதினாங்களா?

அது கூட பரவாயில்லை... ஈரோட்டுக்காரங்களுக்கு புதுசா ஒரு ப்ளாக் ஆரம்பிச்சு இருக்காங்கல்ல...அந்த ப்ளாக்லயாவது என்னோட ப்ளாக சேர்த்தாங்களா??? ம்...ஹூம்.... நானும் ஈரோடு தானு ஏன் இவங்களுக்கு புரிய மாட்டேங்குது? பொடிப்பையன்னு தான விட்டுட்டீங்க! நான் எவ்வளவு பெரிய ஆள்னு புரிய வைக்கணும்னு தான் விழாவுல நான் எடுத்த எல்லா போட்டோஸையும் இங்க போடறேன்.

விழாவுக்கு வந்திருந்த அங்கிள்ஸ் எல்லாரும், நான் போட்டோ எடுத்திட்டு இருந்ததைப் பார்த்திருப்பீங்க! அவங்கவங்க மூஞ்சிய நல்லா எடுத்திருக்கேனானு பாருங்க! யாரையாச்சும் கவர் பண்ணலைனா ஃபீல் பண்ணாதிங்க! அடுத்தவாட்டி குளோசப்லயே எடுத்திடுறேன்!!

-லாமின்.


14 comments:

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் said...

//அந்த ப்ளாக்லயாவது என்னோட ப்ளாக சேர்த்தாங்களா??? ம்...ஹூம்.... நானும் ஈரோடு தானு ஏன் இவங்களுக்கு புரிய மாட்டேங்குது? பொடிப்பையன்னு தான விட்டுட்டீங்க!//

தம்பி சேர்த்தாச்சுப்பா....

இடுகைக்கு நன்றி...

ஈரோடு கதிர் said...

தலைவரே...
சேர்க்க சொல்லிட்டேன்

படமெல்லாம் சூப்பர் ராசா...

அம்மாகிட்ட சொல்லி சமையல நிறுத்திப்போட்டு... ஈரோடு குழும வலைய ஃரெபரஷ் பண்ணச் சொல்லு...

சீக்கிரம் வந்துறும்...

ஈரோடு கதிர் said...

அட... பாருங்க.... நான் பின்னூட்டம் போடறதுக்குள்ளே வந்துடுச்சு

நம்மாளுக கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லைபா

அண்ணாமலையான் said...

இத பார்றா..

துபாய் ராஜா said...

படம் எல்லாம் நல்லயிருக்கு தம்பி.

வால்பையன் said...

படங்கள் அருமை லாமின்!

cheena (சீனா) said...

அனைத்துப் படங்களும் அருமை அன்பின் லாமின்

நல்வாழ்த்துகள்

☼ வெயிலான் said...

நானும் உன்னைப் பத்தி எழுத மறந்துட்டேனே :(

படங்களெல்லாம் சூப்பர். நீ கேமிரா பிடித்திருந்த விதமே தேர்ந்த புகைப்படக்கலைஞனின் நேர்த்தியில் இருந்தது.

வாழ்த்துக்கள் லாமின்!

S.A. நவாஸுதீன் said...

இப்போ லாமினும் பிரபலப்பதிவர்தான். படங்கள் அத்தனையும் அருமை.

Anonymous said...

nathi adi kana super!! vallka valamudan

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

படங்கள் மூலமாகவே விளக்கிட்டியே, நல்லா!

ஆரூரன் விசுவநாதன் said...

படங்கள் அருமை.......இவ்வளவு அழகாக படமெடுப்பீர்கள் என்று நினைக்கவில்லை. நந்து, கார்த்தி ஆகிய இரண்டு அருமையான புகைப்படக் கலைஞர்கள் நம்மொடு இருக்கிறார்கள். பயன்படுத்திக்கொள்ளுங்கள். பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

எம்.எம்.அப்துல்லா said...

நீ ஓடி ஓடி படம் பிடித்தது வெகுஅழகு :)

சீமான்கனி said...

அட எல்லா படமும் அருமையா எடுத்து இருக்கியே....வெரி குட்...
நிதானமாய் க்ளிக்கி இருக்கிறாய்...
சூப்பர்....கீப் இட் அப்..

Post a Comment

தமிழில் டைப் பண்ண, தங்கிலிஷில் அடியுங்க!