Lilypie

Lilypie

Sunday, August 30, 2009

மிக்கி மவுஸ் பிறந்த கதை



அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் வால்ட் டிஸ்னிக்கு சொந்தமாக ஒரு அலுவலகம் இருந்தது. அதன் அருகில் ஒரு தொட்டியில் இரண்டு எலி குட்டிகள் வசித்து வந்தன. வால்ட் டிஸ்னி சாப்பிட்டு போடும் மிச்சங்களுக்காக அவை எப்போதும் சண்டையிட்டு கொண்டே இருக்கும். இதை பார்ப்பதில் டிஸ்னிக்கு தனி குஷி!

அதில் பிரவுன் நிற குட்டி மீது டிஸ்னிக்கு ரொம்பவும் பாசம் அதிகம். அவற்றை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்க வசதியாக ஒரு கூண்டில் போட்டு வைத்தார். வெளியூர் செல்லும் போது பாதுகாப்பாக அவற்றை ஒரு இடத்தில் விட்டு விடுவார். ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, எலிகளை வரைந்து தன் மனைவியிடம் காட்டி, இதற்கு பெயர் மோள்டிமர் மவுஸ் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் மனைவி, மிக்கி மவுஸ் என்று வைத்தால், பொருத்தமாக இருக்கும் என்று கூறி உள்ளார்.

இப்படி உருவானது தான் மிக்கி மவுஸ். 1928ல் முதல் பிளேன் கிரேஸி என்ற முதல் மிக்கி மவுஸ் படம் வெளிவந்தது. அதில், மிக்கிக்கு குரல் கொடுத்தவரும் டிஸ்னி தான்.

-லாஃபிரா.

Thursday, August 27, 2009

தானே கிழியுது

என்னோட ஷால் கிழிந்திருந்ததை பார்த்து எங்க மம்மி, இப்படி கிழிச்சிட்டியேனு திட்டினாங்க. அதுக்கு நான் சொன்னேன், ‘மம்மி, நான் கிழிக்கலே...அது தானே கிழிஞ்சிருச்சு’ அப்படீனு!

அதுக்கு லாமின் சொல்றான், ‘மம்மி, இப்படித்தான் என் மேத்ஸ் நோட்லயும் பேப்பர் தானே தானே கிழியுது’னு. அவன் சொல்றதை கேட்டா சிரிப்பா வருது!

-லாஃபிரா.

Tuesday, August 25, 2009

கல்வி விற்பனைக்கு

பொதுவா கல்வி இன்னிக்கு வியாபாரம் ஆயிருச்சுன்னு சொல்வாங்க! அதை சாட்சியோட போன ஞாயிறு தினத்தந்தியில் பார்த்தேன்!



-லாஃபிரா

Sunday, August 16, 2009

தம்பி ஏற்றிய கொடி

நேற்று சுதந்திர தினத்துக்கு நான் ஸ்கூலுக்கு போயிட்டேன். லாமினுக்கு குட்டீஸ் என்பதால் லீவ். அதனால, எங்க டாடி அவனை பார்க்கில் கலெக்டர் கொடி ஏற்றுவதை பார்க்க கூட்டிட்டு போனார். போய்ட்டு வந்தவனுக்கு அவனும் கொடியேற்ற ஆசை!

பின் வாசலில் கிடந்த ஏணிக்குதிரையை நிமிர்த்தி போட்டு, டம்ளரில் கொஞ்சம் மண்ணை போட்டு, கொடி குத்தி வெச்சிட்டு, நானும் கொடி ஏத்திட்டேன் வந்து எல்லாரும் சல்யூட் பண்ணுங்க என்றான். போய் பார்த்து எல்லாரும் சிரித்தோம்.

- லாஃபிரா

Thursday, August 13, 2009

ஹேப்பி பர்த் டே டூ யூ

லாமின் கண்ணே
மாணிக்க மயிலே
மதியின் சுடரே

கணிப்பொறி சிறுவனே
என் குட்டி தம்பியே!

பிறந்தநாள் உனக்கு
உன்மேல் பிரியம் எனக்கு!

உன் ஆப்கா பாடுகிறேன்
பிறந்தநாள் வாழ்த்துதனை!

சீரோடு சிறப்போடு
நெடுங்காலம் வாழ்ந்திடுவாய்!
நல்ல பெயர் எடுத்திடுவாய்!!

-லாஃபிரா

Friday, August 7, 2009

புக் ஃபெஸ்டிவல் காமடி

எங்க மம்மியும் டாடியும் மூன்று தடவை புக் ஃபெஸ்டிவலுக்கு போயிட்டு வந்துட்டாங்க. ஆனா, எங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டே போகல. நேற்று எங்க ஸ்கூலில், இண்டிபெண்டன்ஸ் டே கல்சுரல் ப்ரோக்ராம்க்கு ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டுருந்தாங்க. அதுல கலந்துக்காதவங்கல எல்லாம் பஸ்ல புக் ஃபெஸ்டிவலுக்கு கூட்டிட்டு போனாங்க. நானும் போனேன்.

மொதோ நாளே சொல்லியிருந்தா பணம் கொண்டு வந்திருப்போம். எதாவது வாங்கி இருக்கலாம், யூஸ்ஃபுல்லா. திடீர்னு போனதுனால, யார் கைலயும் பணம் இல்ல. சும்மா வேடிக்கை தான் பார்த்தோம்.

எங்க மிஸ், புக்ஸ் பிடிச்சிருந்தா, பார்த்து வெச்சுக்கங்க. அப்புறமா பேரண்ட்ஸோட வந்து வாங்கிக்கங்கன்னு சொன்னாங்க.

என் பிரெண்டு (பேர் சொன்னா கோச்சுக்குவாளோனு பயமா இருக்குங்க)! ஒருத்தி! அவளுக்கு ராபின் ஹுட் புக்னா ரொம்ப பிடிக்குமாம். எங்க பார்த்தாலும் வாங்குவாளாம். அவ, அந்த புக்க ஒவ்வொரு ஸ்டால்லயும் தேடிக்கிட்டே இருந்தா.

கடைசியில் ஒரு ஸ்டாலில் அதுவும் ஒரே ஒரு புக் மட்டும் இருந்தது. ஆனா, வாங்க கையில காசு இல்லையே. பேரண்ட்ஸ் கூட வந்து வாங்கறக்குள்ள, அது யாராவது வாங்கிக்கிட்டாங்கன்னா, என்ன பண்ணறதுன்னு அவளுக்கு ஒரே கவலை. என்னடி செய்யலாம்னு கேட்டுட்டே யோசிச்சா.

சரி, இங்கயே எங்காவது இத ஒளிய வெச்சிரலாம்னு, பரபரனு தேடினா, எங்க ஒளிய வைக்கனு... ஒளிய வைக்க இடம் தேடும் போது, நிறைய புக்ஸ் எல்லாம் தள்ளி விட்டுட்டா. எனக்கு ஒரே சிரிப்பா வந்தது, அவ செய்யறத பார்க்க.

கடைசியா, ஒரு அட்டி நிறைய பத்து இருபது புக்குங்க இருந்தது. இந்த புக்க கொண்டு போய், அதுக்கடியில மறைச்சு வெச்சுட்டு வந்திட்டா. பாருங்க, இப்படியெல்லாம் கூட தகிடுதத்தம் நடக்குது! எல்லாம் முன்னாடியே சொல்லாம கூப்பிட்டு போனதுனால தான?

நான் இன்னிக்கு ஸ்கூல் லீவு போட்டுட்டேன். அதனால், அவ, போய் வாங்குனாளா இல்லையானு தெரியல. ஆனா, அவ செஞ்சத நினைத்தா காமெடியா இருக்குங்க!

-லாஃபிரா

Wednesday, August 5, 2009

பூச்சிக்கடி வாங்கிட்டு போங்க

பூச்சிகளுக்கு பாஷை இருந்தால், அதுகளுக்குள் இப்படியெல்லாம் பேசிக்குமோ?!

கொசு இப்படி சொன்னது: நான் ஈ யோட கல்யாணத்துக்கு போக மாட்டேன், ஏனா எனக்கு இன்விடேஷனை ‘ஈ’மெயிலில் அனுப்பல.

பட்டாம்பூச்சி சோர்வாக வந்து உட்கார்ந்தது: அப்பா...Blog To Blog பறந்து பறந்து என் ரெக்கையே வலி எடுத்துக்கிச்சு.

மூட்டைபூச்சியின் அப்பா சம்பந்தியிடம் சொன்னது: கவலைப்படாதிங்க, என் பையன் மூட்டை தூக்கியாச்சும், உங்க பொண்ண கண்கலங்காம காப்பாத்துவான்.

கரப்பான்பூச்சி சட்டை காலரை தூக்கி விட்டுக்கிச்சு: ஆஹா...என் பேருல கூட பதிவர்கள் ஒரு விருது தர்ராங்களாம்.

(பூச்சிக்கடி வாங்கினவங்க, மறக்காம செப்டிக் ஊசி போட்டுக்கங்க!)

-லாஃபிரா.

Tuesday, August 4, 2009

காட்டு பூனை கதை

இது எங்க பாட்டி சொன்ன கதை. காரண காரியமெல்லாம் கேட்காமல் கதையை கேளுங்க. சரியா?

ஒரு சினையான காட்டுப் பூனை ரோட்டில் வந்து ஒரு கோடு போட்டு உட்கார்ந்தது. அந்த வழியா ஒரு வெத்தலகாரன் போனான்.

“வெத்தலகாரா வெத்தலகாரா உன் பொண்டாட்டி வெத்தலைய போட்டு விரல கடிச்சுட்டா வெத்தலைய போட்டு ஓடு”னு சொல்லியது. வெத்தலைய போட்டு ஓடிட்டான்.

அடுத்து ஒரு பாக்குகாரன் போனான்.

“ பாக்குகாரா உன் பொண்டாட்டி பாக்கு போட்டு நாக்க கடிச்சுட்டா பாக்க போட்டு ஓடு”னு சொல்லியது. பாக்க போட்டு ஓடிட்டான்.

அடுத்து ஒரு சுண்ணாம்புகாரன் போனான்.

“சுண்ணாம்புகாரா சுண்ணாம்புகாரா உன் பொண்டாட்டி சுண்ணாம்பு போட்டு நாக்கு வெந்து கிடக்கறா சுண்ணாம்ப போட்டு ஓடு” னு சொல்லியது. சுண்ணாம்ப போட்டு ஓடிட்டான்.

அடுத்து ஒரு புகையிலைகாரன் போனான். புகையிலகாரா புகையிலகாரா உன் பொண்டாட்டி புகையில போட்டு மயக்கம் வந்து கிடக்கறா புகையிலைய போட்டு ஓடுனு சொல்லியது. புகையிலைய போட்டு ஓடிட்டான்.

எல்லாத்தையும் வைத்து ஒரு வீடு கட்டியது. வெத்தலை தான் ஓலையாம். கொட்ட பாக்கு தான் செங்கலாம். சுண்ணாம்பு தான் சிமெண்ட்டாம். புகையிலை தான் தூண்கலாம்.

புது வீட்டுக்கு குடி போய் நாலு குட்டி போட்டது. குட்டிகளுக்கு வெத்தலை வீராயி, பாக்கு பவளாயி, சுண்ணாம்பு சொறியளவா, புகையிலை பொக்கனாத்தி என்று பெயர் வைத்தது.

ஒரு நாள் அது தன் குட்டிகளிடம் நான் போய் உங்க எல்லாத்துக்கும் சாப்பாடு கொண்டு வருகிறேன். யார் வந்தாலும் கதவு திறக்காதீங்க. நான் வந்தா ஒரு ஓட்டை வழியா வாலை விட்டு காட்டுவேன். வெள்ளையா தெரிஞ்சா மட்டும் கதவு திறங்க என்று சொல்லி விட்டு சென்றது.

இதையெல்லாம் ஒண்டி கேட்ட ஒரு மொண்டி குள்ள நரி ஓட்டைக்குள் வாலை விட்டு காண்பித்தது.

“நீ எங்க அம்மா இல்லை. எங்க அம்மா வால் வெள்ளையாக இருக்கும்” என்று கூறி கதவை திறக்கவில்லை.

அந்த குள்ள நரி வாலுக்கு வெள்ளை பெயிண்ட் அடித்து வந்து ஓட்டைக்குள் வாலை விட்டது. நம் அம்மா வந்து விட்டார்கள் என்று கதவை திறக்க எல்லா குட்டிகளும் ஓடின. ஆனால் சுண்ணாம்பு சொறியளவா மட்டும், அது நம்ம அம்மா இல்லை வாலில் கொஞ்சம் கறுப்பாக தெரிகிறது என்றது. மற்ற குட்டிகள் கேட்காமல் போய் கதவை திறந்தன.

சுண்ணாம்பு சொறியளவா மட்டும் ஒளிந்து கொண்டது. உள்ளே வந்த குள்ள நரி சுண்ணாம்பு சொறியளவா தவிர எல்லா குட்டிகளையும் சாப்பிட்டு விட்டு ஓடியது.

சிறிது நேரம் கழித்து வந்த அம்மா பூனையிடம் விஷயத்தை சொல்லி அழுதது சுண்ணாம்பு சொறியளவா. நான் எல்லா நரிகளுக்கும் பிரியாணி விருந்து வைக்கிறேன் பார் என்று சொன்னது.

மறுநாள் எல்லா நரிகளும் விருந்துக்கு வந்தன. அது தான் சமயமென்று ஓட்டு மேல் ஏறி பெரிய கல்லை கீழே தள்ளி விட்டது. எல்லா நரிகளும் நசுங்கி செத்துவிட்டன. ஒரே ஒரு நரி மட்டும் தப்பித்து ஓடி விட்டது.அது மட்டும் ஓடியிருக்காவிட்டால், இன்று நரியினமே இருந்திருக்காது.

-லாஃபிரா.

தமிழில் டைப் பண்ண, தங்கிலிஷில் அடியுங்க!